கிரிக்கெட்டா? படிப்பா?: சச்சின் அட்வைஸ்!
மும்பை:
""தேர்வு தான் முக்கியம். கிரிக்கெட் எல்லாம் அதற்கு அப்புறம் தான் என்கிறார் டெண்டுல்கர்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்ப்பதா, அல்லது தேர்வுக்கு படிப்பதா படிப்பதா என்று குழப்பத்தில் இருக்கும்மாணவர்களுக்கு தான் இந்த திடீர் அட்வைஸ்.
பள்ளி, கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் தொடங்கிவிட்ட நிலையில், வந்திறங்கியிருக்கிறது பாகிஸ்தான் அணி.
இதனால் படிப்பா, கிரிக்கெட்டா என்ற குழப்பத்தில் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறரார்கள். ஆனால் இதுபோன்ற நேரங்களில் படிப்பு தான் முக்கியம் என்று மாணவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் டெண்டுல்கர்.
அவர் கூறுகையில்,
மாணவ, மாணவ மாணவிகளுக்கு இது உண்மையாகவே கடினமான விஷயம் தான். ஆண்டுத்தேர்வு நடக்கும்நேரத்தில் கிரிக்கெட் நடக்கிறது. படிப்பில் முழுக் கவனமும் செலுத்த முடியாமல் மாணவர்கள் தடுமாறுகின்றனர்.
கிரிக்கெட்டும், தேர்வும் ஒரே நேரத்தில் வருவது இது புதிதல்ல. நான் மாணவனாக இருந்த காலத்திலும் இதேபிரச்சினை தான். அப்போது 1987 உலகக்கோப்பை கிரிக்கெட் சரியாக எனது தேர்வு சமயத்தில் தான் வந்தது.
ஆனாலும் எனது கவனம் படிப்பில் தான் இருந்தது. எனவே மாணவர்கள் படிப்பில் தான் கவனம் செலுத்தவேண்டும். கிரிக்கெட் எல்லாம் தேர்வு முடிந்த பிறகு தான். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க மாணவர்களுக்கஎனது வாழ்த்துக்கள் என்றார் டெண்டுல்கர்.












Click it and Unblock the Notifications