கதர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கதர் கிராமத்தொழில் ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கதர் கிராமத் தொழில் வாரியத்தில் 5,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2002-ம்ஆண்டு முதல் அகவிலைப்படி வழங்கப்படவில்லை.

இவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அலுவலக உதவியாளர்கள் மற்றும்அடிப்படை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது.

அவர்களது கோரிக்கையை ஏற்று இப்போது தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி இரண்டுஆண்டுக்கான அகவிலைப்படியை ஒட்டுமொத்தமாக வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2002-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வரையுள்ள காலத்திற்கான 4 சதவீதம், 2002-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதிவரையுள்ள காலத்திற்குரிய 3 சதவீதம், 2003-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வரையுள்ள காலத்திற்குரிய 3 சதவீதம்என 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கதர் கிராமத்தொழில் ஊழியர்கள் இதுவரை 45 சதவீத அகவிலைப்படியை பெற்று வந்தார்கள். இனி இவர்களுக்கு55 சதவீத அகவிலைப்படி கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+