யாழ்பாணத்தில் ராணுவம் சுட்டு 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

யாழ்பாணம்:

இலங்கையில் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் அருகே மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடுநடத்தியதில் 2 பேர் பலியாயினர். இதனால் தமிழர் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

The scene in Srilanka
யாழ்பாணத்தில் இன்று காலை காட்டுத்தனமான வேகத்தில் சென்ற ஒரு இலங்கை ராணுவ ஜீப் மோதி 12 வயதான நாகேந்திரம் துசிகா என்றபள்ளி மாணவி இறந்தாள். மணிபே பகுதியைச் சேர்ந்த துசிகா, வேம்படி பெண்கள் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த விபத்தையடுத்து வேம்படி பள்ளி மாணவிகளும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் இறங்கினர். இலங்கை விமானப் படையின் ஜீப் தீ வைத்துக்கொளுத்தப்பட்டது.

The scene in Srilanka
அப்போது அவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பரமேஸ்வரா சந்திப்பு அருகேஒருவரும், கொட்டடி சந்திப்பின் அருகே ஒருவரும் பலியாயினர்.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழர் பகுதிகள் முழுவதுமேபெரும் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+