தமிழ் வளர்ச்சி வளாகம்: ஜெ. தொடங்கி வைத்தார்
சென்னை :
சென்னையில் தமிழ் வளர்ச்சி வளாகத்தை முதல்வர் ஜெயலலிதா தெடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறைக்காகவும், தமிழ் வளர்ச்சி, பண்பாடுசார்ந்த துறைகளின் அலுவலகங்களுக்காகவும் ரூ. 6.27 கோடி மதிப்பில் ஏழு அடுக்கு மாடிகளுடன் தமிழ் வளர்ச்சிவளாகம் அமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக ரூ. 2 கோடி மதிப்பில் பேஸ்மென்ட் தளம், தரைத்தளம், முதல் தளம் ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. கட்டடப் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தாலும் இதுவரை கட்டி முடிக்கப்பட்ட வரையுள்ளதமிழ் வளர்ச்சி வளாகத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இத் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் கல்வி, வணிக வரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறைச்செயலாளர் இராமய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாரிமுனை குறளக வளாகத்தில் மாத வாடகையில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி இயக்கக அலுவலகம் இனி புதியகட்டடத்தில் இயங்கும்.
பேஸ்மென்ட் தளத்தில் தொல்லியல் துறையின் அச்சுப் பிரிவு, தரைத் தளத்தில் தொல்லியல் துறை இயக்ககம், முதல்தளத்தில் தமிழ் வளர்ச்சி இயக்ககம் ஆகியவை செயல்படும்.












Click it and Unblock the Notifications