ஜெயலட்சுமி: செக் மோசடி வழக்கு ஏப்.8க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
தாராபுரம் :
சிவகாசி ஜெயலட்சுமி மீதான செக் மோசடி வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தாராபுரத்தை சேர்ந்த சண்முகராஜ் என்பவர், ஜெயலட்சுமி தன்னிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பிக் கொடுக்கஜெயலட்சுமி கொடுத்த செக் பணமில்லாமல் திரும்பி விட்டதாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முகம்மது ஜியாவுதீன் முன்னிலையில் நடந்து வருகிறது. வழக்குவிசாரணைக்கு ஜெயலட்சுமி ஆஜரானார்.
அப்போது அவர் நீதிபதியிடம், சண்முகராஜ் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. இது பொய் வழக்கு என்று கூறினார். இதையடுத்துஏப்ரல் 8ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications