ஜார்கண்ட் தவறை பிகாரிலும் செய்யாதீர்கள்: வெங்கையா
சென்னை:
ஜார்கண்ட், கோவா மாநிலங்களில் செய்த தவறுகளை உணர்ந்து கொண்டு பீகாரிலும் அதேபோன்ற தவறைசெய்யாமல் காங்கிரஸ் நடந்து கொள்ள வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடுகூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ்கட்சி ஜனநாயகப் படுகொலையை செய்துள்ளது. இதை தற்போது அக்கட்சி உணர்ந்துள்ளது.
இதை பாடமாக எடுத்துக் கொண்டு பீகாரில் அது கவனத்துடன் நடந்து கொள்ளும். நடந்து கொள்ள வேண்டும்.பெரும்பான்மை பலம் இல்லாத ராஷ்டிரிய ஜனதாதளத்தை ஆட்சியமைக்க பீகார் மாநில ஆளுநர் அழைப்புவிடுக்கக் கூடாது. அதற்கு காங்கிரஸும் ஆதரவளிக்கக் கூடாது.
ராப்ரி தேவியை முதல்வராக்க காங்கிரஸ் முயலுவதாக நாங்கள் அறிகிறோம். ஆனால் அதை பாஜகஅனுமதிக்காது.
லாலு பிரசாத் மற்றும் அவரது கட்சியின் காட்டு ராஜ்யத்திற்கு முடிவு கட்டும் விதமாகவே அந்தக் கட்சிக்கு எதிராகமக்கள் வாக்களித்துள்ளனர். லாலுவுக்கு எதிராக 140 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே லாலுவின் மனைவியைமுதல்வராக்க காங்கிரஸ் துணை போகக் கூடாது என்றார் வெங்கையா.












Click it and Unblock the Notifications