For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல்டி அடித்தது ஏன்? இளங்கோவன் மழுப்பல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கூட்டணி ஆட்சி குறித்துப் பேசி விட்டு இப்போது பல்டி அடித்தது ஏன் என்பதற்கு மழுப்பலான பதிலை மத்திய அமைச்சர் இளங்கோவன்கூறியுள்ளார்.

தஞ்சை வந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி ஆட்சி குறித்து நான் முதலில் பேசியதிலிருந்து பின் வாங்கினேன்என்றோ, முன் வாங்கினேன் என்றோ கூற முடியாது.

கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது, அதை மறுப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்று கருணாநிதியே கூறியுள்ளார். அதுபோலஇந்தக் கேள்வியைக் கேட்கும் உரிமை உங்களுக்கு (நிருபர்களுக்கு) உள்ளது. அதற்கு மழுப்பலாக பதிலைச் சொல்லும் உரிமை எனக்குஉள்ளது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மிகச்சிறந்த பட்ஜெட்டை கொடுத்துள்ளார். இந்த பட்ஜெட்டால் தமிழ்நாட்டுக்கு பல்வேறு நன்மைகள்கிடைத்துள்ளது.

கையால் செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு வரி ரத்து, எந்திரம் மூலம் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு வரி குறைப்பு, சமையல் எண்ணைவரி ரத்து, வருமான வரிக்கான வரம்பு உயர்த்தப்பட்டது ஆகியவை சிறப்பான அம்சங்களாகும்.

இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பயனடைவார்கள். வங்கியில் 10,000 ரூபாய் பணம் எடுத்தால் 10 ரூபாய் வரிஎன்பது மக்களிடையே சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான். இந்த வரி குறைக்கப்படும் என நம்புகிறேன்.

ப. சிதம்பரத்தை முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்தது நாகரீகம் கிடையாது. மத்திய அமைச்சர் போன்ற உயர் பதவிகளில்இருப்பவர்கள் பற்றி பேசும்போது யாராக இருந்தாலும் அளந்து பேச வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X