For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள் மீது பூசாரி நடக்கும் விழாவுக்கு தடை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் பெண்கள் மீது பூசாரி நடந்து வரும் விழாவுக்கு போலீஸ் தடை விதித்துள்ளது.

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள பூச்சியூர் வேட்டைக்கார சாமி கோயிலில் சிவராத்திரி விழா சிறப்பாகக்கொண்டாடப்படும். சிவராத்திரிக்கு மறுநாள் ஆணி செருப்புடன் பெண்கள் மீது பூசாரி நடந்து வரும் விழா நடைபெறும்.

வேட்டைக்கார சாமியே பூசாரி வடிவில் வந்து தங்களை மிதிப்பதாகவும், அதனால் தாங்கள் நினைத்தது நடக்கும் என்றும் அந்தப் பகுதிமக்கள் நம்பி வருகிறார்கள். திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை இல்லாத பெண்கள் தங்களது ஆசை நிறைவேற வரிசையாக வீதியில்குப்பறப்படுத்து இருப்பார்கள்.

இவர்கள் மீது பூசாரி ஆணி செருப்புடன் நடந்து செல்வார். இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் இந்த விழாவிற்கு போலீஸ் தடை விதித்துள்ளது.

அதேபோல் சுண்டக்காமுத்தூரில் மயான பூஜை என்ற பெயரில் சுடுகாட்டுக்குச் சென்று பிணங்களின் எலும்புகளைக் கடிக்கும் நிகழ்ச்சிக்கும்தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X