அருணா கொலை: குற்றப் பத்திரிக்கை தயார்
திருநெல்வேலி:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தயாராகி விட்டது.
ஆலடி அருணா கடந்த டிசம்பர் 31ம் தேதி நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது சொந்த ஊரில் படுகொலை செய்யப்பட்டார்.அவருடன் நண்பரான ஆசிரியர் பொன்ராஜ் என்பவரும் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி பிரபல கல்வி நிறுவனங்களின் அதிபரானஎஸ்.ஏ.ராஜாவைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நாகர்கோவில் பென்னி, மதுரை ஆட்டோ பாஸ்கர் ஆகியோர்போலீஸ் பிடியில் இருந்தபோது மர்மமான முறையில் இறந்தனர். முக்கியக் குற்றவாளியான வேல்துரை உள்ளிட்டோர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இக்கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. அடுத்தவாரத்தில் இதை தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்வர் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications