ரவியை மிரட்டிய வழக்கு: ஜெயேந்திரருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை காஞ்சி மட வக்கீல்கள் சிறையில் சென்று மிரட்டியதாக தொடரப்பட்டவழக்கில் ஜெயேந்திரருக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை காஞ்சி மட வக்கீல்கள்மிரட்டியதாக ரவி சுப்பிரமணியத்தின் மனைவி சித்ரா போலீஸில் புகார் கொடுத்தார்.
இதன்பேரில் காஞ்சிபுரம் போலீஸார் கடந்த மாதம் 19-ம் தேதி ஜெயேந்திரர் மீது மேலும் ஒரு வழக்குதொடர்ந்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல்செய்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, இந்த வழக்கில்ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications