செக்ஸ் சாமியார் சதுர்வேதியின் "அட்வைஸர்" கைது!
சென்னை:
செக்ஸ் சாமியார் சதுர்வேதியின் சட்ட ஆலோசகர் என்று கூறப்படுபம் நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் சதுர்வேதி நடத்தி வந்த மடத்தின் செயலாளராக இருந்தவர் தாமோதரன். இவர் ஒரு வழக்கறிஞர். சதுர்வேதி வழக்கில் தற்போது தாமோதரனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சதுர்வேதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தாமோதரன் சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தன்னிடம் வந்த பக்தைகளை ஏமாற்றி செக்ஸ் உறவு கொண்டது, ஹோமோ செக்ஸ், பெண்களுடன் குரூப் செக்ஸ் என காமக் களியாட்டம் போட்டவர் இந்த சதுர்வேதி சாமியார். தங்கத்திலேயே பூணூ
பென்ஸ் கார்கள், தென்னிந்தியாவில் பல இடங்களில் சொத்துக்கள் என ஏகபோகமாய் வாழந்தார். சுரேஷ் என்ற தொழிலதிபரின் மனைவியையும் மகளையும் கடத்திச் சென்று இருவரிடமும் வலுக்கட்டாயமாக செக்ஸ் உறவு வைத்து தொல்லை கொடுத்த நிலையில் தான் போலீசாரிடம் மாட்டினார்.












Click it and Unblock the Notifications