Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன திருநீரா கேட்கிறாய்? திமுகவின் நையாண்டி தர்பார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொண்ட முறை குறித்த வரலாறு தெரியாமல் சபாநாயகர் காளிமுத்து அவர்களைபாராட்டுகிறார் என்று சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.

சட்டசபையில், திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதியை சபாநாயகர் காளிமுத்து இன்று வெளியேற்றினார். இதை எதிர்த்துதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.

சபையை விட்டு வெளியே வந்த துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சட்டசபையில் திமுகதான் தறி கெட்டு நடக்கிறது, காங்கிரஸ்காரர்கள் அமைதியாக இருக்கிறார்கள், பாமகவினர் அமைதியாகஇருகிகறார்கள் என்று கூறுகிறார் முதல்வர்.

அவர் கூறுவதை அப்படியே வழி மொழிகிறார் சபாநாயகர் காளிமுத்து. அவருக்கு சட்டசபை வரலாறு தெரியாது. இதே காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்பு ஒரு முறை சட்டசபைக்குள் இருந்து கொண்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.

சபையை விட்டு வெளியேற மறுத்தனர். இரவு முழுவதும் உள்ளே இருந்தார்கள், அடுத்த நாள் மதியம் வரை உள்ளேயேஇருந்தார்கள். மொத்தம் 2 நாட்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி சபையை நடத்த விடாமல் செய்த வீரர்கள்தான்காங்கிரஸ்காரர்கள். அவர்களா அமைதியானவர்கள்?

திமுகவினர் யாரும் எதையும் பேசக் கூடாது, எங்களை சட்டசபையை விட்டு வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதில்முதல்வரும், சபாநாயகரும், அமைச்சர்களும் மிகத் தீவிரமாக, கவனமாக இருக்கின்றனர் என்றார் துரைமுருகன்.

நடுரோட்டில் நையாண்டி தர்பார்:

Duraimurugan in action
நேற்று சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் மெரீனா கடற்கரை சாலையில் அமர்ந்து, தமிழக சட்டசபை குறித்து நையாண்டிதர்பார் நாடகம் நடத்தினர்.

துரைமுருகன் இரண்டு கைகளையும் தட்டி ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார். சட்டசபையில் காளிமுத்து எப்படி நடந்து கொள்வார் என்பதையும் தனக்கே உரியமேனரிசத்துடன் மிமிக்ரி செய்து காட்டினார். முதல்வர் வரும்போது சபாநாயகர் எப்படி நடந்துகொவார் என்பதை அவர் நடித்துக் காட்டினார்.

நடுரோட்டில் நடந்த இந்த நையாண்டி தர்பாரை அங்கு நின்று பொது மக்கள் மிகவும் ரசித்தனர். பின்னர் ஜால்ரா அடித்தபடியே பஜனைப் பாட்டு பாடினார்.

அப்போது திமுக எம்.எல்.ஏ. அசோகன், "சாமி! திருநீறு கொடுங்க என்றார்.

அப்போது பொன்முடி குறுக்கிட்டு," என்ன திருநீறா கேட்கிறாய்? தமிழ்நாடு ஆஸ்பத்திரியை பங்கு போட வந்திருக்கிறாயா ? என்று காஞ்சி மடவிவகாரத்தை இணைத்துப் பேசியபோது எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் கைகொட்டி சிரித்தனர்.

இதைத் தொடர்ந்து பாசமலர்கள் படத்தில் வரும், "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்ற பாடலை வரியை மாற்றி காளிமுத்துவை கிண்டல்செய்வது போல துரைமுருகன் பாடினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+