ஸ்டாலினைக் கொல்ல முயற்சியா? மத்திய உளவுப் பிரிவு விசாரணை
சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினைக் கொலை செய்ய தமிழகத்தில் சதி நடந்து வருவதாக கூறப்படுவதுகுறித்து மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன்களான அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நீரு பூத்த நெருப்பாக உள்ள பூசலைமையமாக வைத்து ஸ்டாலினைப் போட்டுத் தள்ளவும், அழகிரியைத் தூக்கி உள்ளே வைக்கவும் முயற்சிநடப்பதாகவும், இதற்கு தமிழக உளவுப் பிரிவில் உள்ள ஒரு மூத்த அதிகாரியே திட்டமிட்டு காய் நகர்த்திவருவதாகவும் திமுக தரப்பில் திகீர் குற்றம் சாட்டப்படுகிறது.
காவல்துறையில் உள்ள தங்களது ஆட்கள் மூலம் இந்த சதியை மோப்பம் பிடித்ததாகவும், இந்த விவகாரத்தைமத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் திமுக தரப்பில் சொல்கிறார்கள்.
கடலூர் சிறையில் குண்டர் சட்டத்தில் உள்ள ஒரு ரெளடியை வெளியில் விட்டு காரியத்தை முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளதாக சொல்கிறது திமுக.
இச் சதித் திட்டத்திற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ஆற்காடு வீராசாமி கூறி வருகிறார்.
இந் நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் சட்டசபையில் கேட்டபோது, ஸ்டாலின் யாருடனும்பேசுவதில்லை, அவரைப் போய் யார் கொலை செய்யப் போகிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா நக்கலாகபதிலளித்தார்.
ஆனால், திமுகவின் இந்தப் புகாரை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. தனது உளவுப் பிரிவின்மூலமும் தகவல்களைத் திரட்டிய மத்திய அரசுக்கு சில அதிர்ச்சிகரமான தகவல்கள் போய்ச் சேர்ந்துள்ளன.
மேலும், ஆளுநர் பர்னாலாவும், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சென்னை வந்து ரகசிய விசாரணையில்இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட அந்த தமிழக காவல்துறை உளவுப் பிரிவு அதிகாரியிடமும்மத்திய உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்டாலினையும் இக்குழுவினர் சந்தித்துள்ளனர். மத்திய பாதுகாப்பு தரத் தயாராக இருப்பதாகவும் அவரிடம்கூறியிருக்கிறார்கள், ஆனால் அதை ஸ்டாலின் மறுத்து விட்டதாக சொல்கிறார்கள்.
சென்னையிலிருந்து செயல்படும் மத்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகள் தமிழக அரசின்செயல்பாடுகள், தமிழக உளவுத்துறையின் செயல்பாடுகளை மத்திய அரசிடம் மறைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர்களில் சிலருடைய தலைகள் உருளும் என்று தெரிகிறது.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications