ஸ்டாலினைக் கொல்ல முயற்சியா? மத்திய உளவுப் பிரிவு விசாரணை
சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினைக் கொலை செய்ய தமிழகத்தில் சதி நடந்து வருவதாக கூறப்படுவதுகுறித்து மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன்களான அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நீரு பூத்த நெருப்பாக உள்ள பூசலைமையமாக வைத்து ஸ்டாலினைப் போட்டுத் தள்ளவும், அழகிரியைத் தூக்கி உள்ளே வைக்கவும் முயற்சிநடப்பதாகவும், இதற்கு தமிழக உளவுப் பிரிவில் உள்ள ஒரு மூத்த அதிகாரியே திட்டமிட்டு காய் நகர்த்திவருவதாகவும் திமுக தரப்பில் திகீர் குற்றம் சாட்டப்படுகிறது.
காவல்துறையில் உள்ள தங்களது ஆட்கள் மூலம் இந்த சதியை மோப்பம் பிடித்ததாகவும், இந்த விவகாரத்தைமத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் திமுக தரப்பில் சொல்கிறார்கள்.
கடலூர் சிறையில் குண்டர் சட்டத்தில் உள்ள ஒரு ரெளடியை வெளியில் விட்டு காரியத்தை முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளதாக சொல்கிறது திமுக.
இச் சதித் திட்டத்திற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ஆற்காடு வீராசாமி கூறி வருகிறார்.
இந் நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் சட்டசபையில் கேட்டபோது, ஸ்டாலின் யாருடனும்பேசுவதில்லை, அவரைப் போய் யார் கொலை செய்யப் போகிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா நக்கலாகபதிலளித்தார்.
ஆனால், திமுகவின் இந்தப் புகாரை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. தனது உளவுப் பிரிவின்மூலமும் தகவல்களைத் திரட்டிய மத்திய அரசுக்கு சில அதிர்ச்சிகரமான தகவல்கள் போய்ச் சேர்ந்துள்ளன.
மேலும், ஆளுநர் பர்னாலாவும், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சென்னை வந்து ரகசிய விசாரணையில்இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட அந்த தமிழக காவல்துறை உளவுப் பிரிவு அதிகாரியிடமும்மத்திய உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்டாலினையும் இக்குழுவினர் சந்தித்துள்ளனர். மத்திய பாதுகாப்பு தரத் தயாராக இருப்பதாகவும் அவரிடம்கூறியிருக்கிறார்கள், ஆனால் அதை ஸ்டாலின் மறுத்து விட்டதாக சொல்கிறார்கள்.
சென்னையிலிருந்து செயல்படும் மத்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகள் தமிழக அரசின்செயல்பாடுகள், தமிழக உளவுத்துறையின் செயல்பாடுகளை மத்திய அரசிடம் மறைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர்களில் சிலருடைய தலைகள் உருளும் என்று தெரிகிறது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications