For Daily Alerts
Just In
தண்டி யாத்திரை நினைவு நாள்: வாசன் தலைமையில் காங். உறுதிமொழி
சென்னை:
தண்டி யாத்திரையின் 75வது ஆண்டு நினைவு தினம் சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடந்தது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி காங்கிரஸ் கட்சிசார்பில் நாடு முழுவதும் தண்டி யாத்திரை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் உறுதிமொழி ஏற்புநிகழ்ச்சி நடந்தது. வாசன் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் அதை திருப்பிக் கூறி உறுதியேற்றனர்.
எம்.பிக்கள் சுதர்சன நாச்சியப்பன், ராணி, ஞானதேசிகன், ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Saturday, March 12, 2005, 5:30 [IST]