For Daily Alerts
Just In
மதுரையில் இன்று திருக்குறள் மாநாடு
மதுரை:
மதுரையில் உலக திருக்குறள் பேரவை சார்பில் 2 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது.
மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் அரங்கத்தில் நடைபெறும் மாநாட்டை உலக திருக்குறள் பேரவையின் தலைவர் தவத்திரு குன்றக்குடிபொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
திருக்குறளில் புலமை பெற்ற நிபுணர்களும், கல்வியாளர்களும், அறிஞர்களும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். துவக்கநிகழ்ச்சியன்று திருவள்ளுவரின் முழு உருவப் படத்தை பாலமுருகனடிமை சுவாமிகள் திறந்து வைக்கிறார்.
திருக்குறள் குறித்த விரிவான ஆய்வும், பல்வேறு கட்டுரைகளும் மாநாட்டில் இடம் பெறவுள்ளன.
Comments
Story first published: Saturday, March 12, 2005, 5:30 [IST]