நாளை பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெ. ஆஜராவாரா?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், சுதாகரன் ஆகியோர் வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நாளை (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
ஆனால், சட்டசபைக் கூட்டம் நடந்து கொண்டுள்ள நிலையில், நாளை காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது முதல்வர் பேசவேண்டியுள்ள சூழலில், ஜெயலலிதாநநிாளை பெங்களூர் செல்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஜெயலலிதா, உடன் பிறவா சகோதரி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், தினகரன் ஆகியோர் ரூ. 66கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை தனி நீதிமன்றத்திலிருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டது. பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்குநாளை விசாரணைக்கு வருகிறது. நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தனி நீதிமன்றம் ஏற்கனவேநோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விசாரணைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. ஜெயலலிதா வந்தால் அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்கான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்திற்கு வருவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக சட்டசபையில்பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து ஜெயலலிதாநாளை பேசவுள்ளார்.
இதனால் அவர் பெங்களூர் செல்வாரா அல்லது தன்னால் ஆஜராக முடியவில்லை என்று வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்வாராஎன்பது உறுதியாகத் தெரியவில்லை.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications