சட்டசபை திமுகவில் கோஷ்டிகள்: காளிமுத்து
சென்னை:
சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் கோஷ்டிகளாக செயல்படுகிறார்கள் என சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
காளிமுத்து அளித்துள்ள பேட்டியில்,
திமுக எம்எல்ஏக்கள் யாருக்கும் கட்டுப்படுவதில்லை. அது தான் அடிப்படை பிரச்சனை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள்எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் சொன்னால் கட்டுப்படுகிறார்கள். ஜி.கே. மணி சொன்னால் பா.ம.க. எம்எல்ஏக்கள் கேட்கிறார்கள்.
ஆனால், திமுக எம்எல்ஏக்கள் மட்டும் யார் சொன்னாலும் கட்டுப்படுவதில்லை. தலைவர்கள் பேசும்போது எம்எல்ஏக்களும்கூடவே பேசுகிறார்கள். திமுக சட்டசபை கட்சியே கோஷ்டிகளாக இயக்குவது போலத் தெரிகிறது.
திமுகவினர் சபாநாயகர் உத்தரவுக்கும் கட்டுப்படுவதில்லை. முதல்வரின் முன்னாள் நின்று கொண்டு அசிங்கமான வார்த்தைகளைபேசுகிறார்கள். இதை எப்படி அனுமதிப்பது. எதற்கும் கட்டுப்படாத நிலையில் தான் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றநேர்கிறது.
யார் பேசினாலும் திமுக எம்எல்ஏக்களும் கூடவே பேசிக் கொண்டிருப்பார்கள். யாராவது அமைச்சர்களை பாராட்டி பேனால்ஜால்ரா என்பார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications