பெரியாரை மறந்த கருணாநிதி!
திண்டுக்கல்:
திண்டுக்கல்லுக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி, அண்ணா சிலைக்கு மட்டும் மாலை அணிவித்தார். அருகில் இருந்த பெயார் சிலைக்குஅவர் மாலை அணிவிக்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தென் மண்டல மாநாடு திண்டுக்கல் அருகே நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து ரயில் மூலம்திண்டுக்கல் வந்தார் கருணாநிதி.
ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடியிருந்து அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கிளம்பியகருணாநிதி, வழியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பெரியார் சிலைக்குஅவர் மாலை அணிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கருணாநிதியின் கார் விருட்டென கிளம்பி மாநாட்டு அரங்கை நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் அங்கே லேசான சலசலப்புஏற்பட்டது. பெரியார் சிலைக்கு கருணாநிதி மாலை அணிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை.