விஜயக்குமாருக்கு விருது மறுப்பு ஏன்?
டெல்லி:
தமிழக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமாருக்கும், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணனுக்கும் விருதுகள் வழங்கப்படாததற்கு என்னகாரணம் என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது.
வீரப்பனை வீழ்த்தியதை கெளரவிக்கும் வகையில், அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமாருக்கு பத்மஸ்ரீ விருதும், செந்தாமரைக்கண்ணனுக்கு அசோக சக்கரா விருதும் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
ஆனால் இருவருக்கும் மத்திய அரசு விருதுகள் வழங்கவில்லை. இதை முதல்வர் ஜெயலலிதா பெரிய பிரச்சினையாக எழுப்பினார். இதுகுறித்து விளக்கம் கேட்டு அதிமுக எம்.பி. மலைச்சாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அளித்துள்ள விளக்கத்தில், பத்மஸ்ரீ விருது வழங்க ஒரு காவல்துறைஅதிகாரியின் பெயரை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியிருந்தது. ஆனால் விண்ணப்பிப்பதற்குரிய காலக் கெடுவைத் தாண்டிவிண்ணப்பம் வந்ததால் அது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இன்னொரு அதிகாரிக்கு அசோக் சக்கரா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த விருதைப் பெறும் தகுதி அவருக்குஇல்லை என்பது தெரியவந்ததால் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்றார் ஜெய்ஸவால்.
மேலும், இரு அதிகாரிகளுக்கும், தமிழக அரசு பரிந்துரைத்துள்ள பதவி உயர்வு, ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான விதிமுறைகளின்படிமேற்கொள்ளப்பட முடியாது என்பதால் பதவி உயர்வும் அளிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.