பி.டி.ஆரை கண்டுகொள்ளாத திமுக தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் திமுக மாநாட்டுக்கு வந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனை திமுக தலைவர்கள்கண்டுகொள்ளவில்லை. அவரும் மாநாட்டில் அதிக நேரம் இருக்கவில்லை.

மதுரையில் அழகிரி தொல்லையால் திமுகவில் இருந்து ஒதுங்கியிருந்த பி.டி.ஆர், முன்னாள் அமைச்சர்தா.கிருட்டிணன் கொலைக்குப் பின் சுத்தமாகவே கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

பின்னர் பி.டி.ஆரின் தூரத்து உறவினர் வீட்டில் ஸ்டாலின் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.இதன்மூலம் பிடிஆர்-திமுக உறவு கொஞ்சம் சரியானது.

ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. திண்டுக்கல் திமுக மாநாட்டுக்கு வந்த பி.டி.ஆர். நேராக மேடைக்குச்சென்று திமுக தலைவர் கருணாநிதியிடம் சால்வை ஒன்றைக் கொடுத்தார். அதை கருணாநதி புன்றுவலுடன்பெற்றுக் கொண்டார்.

பின்னர் கீழே இறங்கிய பி.டி.ஆர். புறப்பட்டுச் சென்று விட்டார். மாநாட்டில் அவர் பங்கெடுக்கவில்லை. பி.டி.ஆரைதிமுகவின் முன்னணித் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, குறைந்தபட்சம் வணக்கம் கூடசெலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

40 செல்போன்கள் மாயம்: மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பலருடைய செல்போன்கள் கூட்ட நெரிசலில்காணாமல் போயுள்ளன.

கிட்டத்தட்ட 40 செல்போன்கள் வரை காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவைசெய்தியாளர்கள், புகைப்படக்காரர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினுக்கு ஜால்ரா: மாநாட்டில் பேசிய அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல ஸ்டாலினைப் புகழ்ந்துதள்ளினர். வருகின்ற சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை வகித்து வெற்றி வாகை சூடப் போகிறார்ஸ்டாலின் என்று பலரும் பேசினர்.

இன்னும் சிலரோ, அடுத்த தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தால் காவல்துறை இடம் பெற்றுள்ள உள்துறை ஸ்டாலின்வசம் கொடுக்கப்படும். அதற்கப்புறம் பாருங்கள் வேடிக்கையை என்றெல்லாம் பேசி கைதட்டல் வாங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+