11 கல்லூரிகளில் புதிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு அனுமதி
சென்னை:
தமிழகத்தில் 11 கல்லூரிகளில் புதிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்அனுமதி அளித்துள்ளது.
நிர்வாகவியல், கம்ப்யூட்டர் அறிவியல், பார்மஸி மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பக் கல்வியை இந்த புதிய 11கல்லூரிகளும் வழங்கவுள்ளன. இவற்றில் 6 கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிப்பும், 3 கல்லூரிகள் எம்.சி.ஏ. படிப்பையும்,தலா 1 கல்லூரி பி.பார்ம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பக் கல்வியையும் நடத்தஅனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கல்லூரிகளில் சில ஏற்கனவே கலை மற்றும் அறிவியல் படிப்புகளை நடத்தி வருகின்றன. இருப்பினும்,எம்.பி.ஏ, எம்.சி.ஏ, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளை நடத்தும் கல்லூரிகளை சுயேச்சையான கல்விநிறுவனங்களாகவே அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கருதுவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட தொழில்நுட்பப் படிப்புகளை நடத்த அனுமதி கோரிவிண்ணப்பித்திருந்தன. அவற்றிலிருந்து 11 கல்லூரிகளுக்கு மட்டும் மேற்படிப்பை நடத்த அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டுள்ளவற்றில் சென்னையைச் சேர்ந்தவை 2 கல்லூரிகள், கோவையைச் சேர்ந்தவை 2, மதுரை,திருவள்ளூர், தேனி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த தலா 1 கல்லூரிக்கு மேற்படிப்புதொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.