பெங்களூர் இன்போசிஸ் நிறுவனத்தில் வெடிகுண்டு புரளி
பெங்களூர்:
பெங்களூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸுக்கு வந்த தகவலால்இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களை தாக்கத்திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் முக்கிய சாப்ட்வேர் நிறுவனங்களைபோலீஸார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூர் விப்ரோ நிறுவனத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்நிறுவன அதிகாரி ஒருவருக்கு போன் வந்தது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், அந்நிறுவனஊழியர் ஒருவரே, வெடுகுண்டு புரளியைக் கிளப்பியது தெரியவந்தது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு பெங்களூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியமர்ம ஆசாமி, இன்போசிஸ் நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினான்.
அதிர்ச்சியடைந்த போலீஸார், இன்போசிஸ் அலுவலகத்திற்கு மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று சோதனைநடத்தினர். பல மணிநேர சோதனைக்குப் பிறகும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதேபோல எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள வேறு சில சாப்ட்வேர் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்வந்ததையடுத்து அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்து வரும் இது போன்ற வெடிகுண்டு புரளிகளால் போலீஸாருக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications