For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் மரம் வெட்டிய 3 பேர் கைது: ஜெ. தகவல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அண்ணா நகரில் அரசுக்குச் சொந்தமான மரத்தை வெட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர்ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.

மார்ச் 11ம் தேதி சட்டசபையில் திமுக உறுப்பினர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மரக் கொம்பை உடைத்து விட்டதற்காக தமிழககாவல்துறையினரும், தமிழக அரசும் வேகம் வேகமாக செயல்பட்டு ஆற்காடு வீராசாமியின் தம்பிக்கு சொந்தமான நிறுவனத்தைச்சேர்ந்த 2 பேரைக் கைது செய்துள்ளனர்.

ஆனால் அண்ணாநகர் 3வது அவென்யூவில் அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய மரம் வெட்டித் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்துஅரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டார். இதுகுறித்து விசாரிப்பதாக ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை நடந்த விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய ஜெயலலிதா, அண்ணா நகர் மூன்றாவதுஅவென்யூ பகுதியில் விளம்பர போர்டு வைக்க இடையூறாக இருப்பதாக கூறி, வளர்ந்த பெரிய மரத்தை வெட்டியதாக மோகன்என்ற மோகன கிருஷ்ணன், அர்ஜூனன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X