For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி இரவிலும் இயங்கும் பழனி ரோப் கார்

By Staff
Google Oneindia Tamil News

பழனி:

பழனி தண்டாயுதபாணி கோவில் மலையில் இயக்கப்படும் ரோப் கார்கள், இனிமேல் இரவிலும் இயக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி மலையில் இழுவை ரயில் எனப்படும் விஞ்ச் இதுவரை இயங்கி வந்தது. இந்த இழுவை ரயிலுக்குப் பதில்நவீனமான ரோப் கார் எனப்படும் தொங்கு ரயிலை முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன்பு இயக்கிவைத்தார்.

ரோப் கார்களுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பகலில் மட்டுமே தற்போதுரோப் கார்கள் இயக்கப்படுகின்றன. இதை இரவிலும் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்த நிலையில், இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, பழனி கோவிலுக்கு வந்தார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரோப் கார் செல்லும் பாதையில் பிரகாசமான விளக்குகள்பொருத்தப்படும்.

ரோப் கார்களை இரவிலும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விளக்குகள் பொருத்தப்பட்ட பின்னர் இரவிலும்ரோப் கார்கள் இயங்கும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X