ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய கண்ணன் எதிர்ப்பு
பாண்டிச்சேரி:
ஊழல் கறை படிந்த புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது என்று காங்கிரஸ்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து ரங்கசாமிக்குஎதிராக கருத்துக்களைக் கூறி வருகிறார் கண்ணன். புதுவையில்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரங்கசாமி பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது. அப்படி அவர் பட்ஜெட்டைத் தாக்கல்செய்ய அனுமதித்தால், அது, அவர் செய்யும் ஊழல்களுக்கு அங்கீகாரம் வழங்கியது போலாகி விடும்.
பொதுப்பணித்துறை முதல் பல்வேறுதுறைகளில் ரங்கசாமி ஊழல் செய்துள்ளார். இத்தனை ஊழல்களையும் நான் ஆதாரத்துடன்வெளிப்படுத்தியுள்ளேன். இதற்குப் பிறகும் ரங்கசாமி மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், ஊழலுக்குகாங்கிரஸ் மேலிடம் துணை போவதாகவே அர்த்தம்.
ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்தால், அவருக்கு எதிரான எனது போராட்டத்தை நான் தீவிரப்படுத்த வேண்டியதுவரும்.
காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தவறான முறையில் வழி நடத்தப்படுகிறது. ஜார்க்ண்ட், கோவா, பீகார், பாண்டிச்சேரிவிவகாரங்களைப் பார்த்தாலே இது புரியும். தவறான வழிகாட்டுதலால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் தான்பாதிக்கப்படுகிறது என்றார் கண்ணன்.












Click it and Unblock the Notifications