ஆசிரியை மாயமான வழக்கு: அதிமுக எம்எல்ஏவுக்கு தொடர்பில்லை - ஜெ
சென்னை:
கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆசிரியை மீனாட்சி காணாமல் போன விவகாரத்தில் அதிமுக எம்.எல்.ஏவும் மாஜிஅமைச்சருமான பாப்பா சுந்தரத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. இந்தக் கடத்தலில் அதிமுகஎம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கை போலீசார் மந்தகதியில் விசாரித்து வந்தனர். அத்தோடு மனைவி காணாமல் போனதாக புகார் கொடுத்தமீனாட்சியின் கணவரையே விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்து வந்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தை நாடினார் மீனாட்சியின் கணவர். மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பேரில் சிபிசிஐடிபோலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸாரின் செயல்பாடுகள் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி இந்த விவகாரத்தைக் கிளப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரமோ அல்லது அவரது உறவினர்களோ இந்தவழக்கில் சம்பந்தப்படவில்லை. பாப்பா சுந்தரத்திற்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளது என்று கூற எந்தவிதமான ஆதாரம்இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications