கட்டப் பஞ்சாயத்து நடத்தும் மகளிர் காவல் நிலையங்கள்
சென்னை:
அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் கட்டப் பஞ்சாயத்துத்தான் நடக்கிறது. எனவே அவற்றை கலைத்து விடவேண்டும் என்று தமிழக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் மகேஸ்வரி கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மகேஸ்வ, தமிழகத்தில் உள்ளஅனைத்து மகளிர் காவல் நலையங்களில் விசாரணை என்ற பெயரில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேரம்பேசுகிறார்கள், ஆண் போலீஸாரின் உதவியுடன் கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார்கள்.
அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற கொள்கை நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் என்றாலும்கூட, இதுமாதிரியான செயல்பாடுகளால் பெண்கள் காவல் நிலையத்திற்குப் போக தயங்குகிறார்கள். பாதிக்கப்பட்டபெண்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை.
வழக்குப் பதிவு செய்யாமலேயே இதுபோல கட்டப் பஞ்சாயத்து நடத்துவதால் பெண்களுக்கு, அனைத்து மகளிர்காவல் நிலையங்களால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. எனவே இவற்றை கலைத்து விட வேண்டும் என்றார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, எந்தக் காவல் நிலையத்தில் தவறு நடக்கிறது என குறிப்பிட்டுக்கூறினால் உய நடவடிக்கை எடுக்கப்படும். பொத்தாம் பொதுவாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று புகார் கூறக்கூடாது.
பொதுவான புகாரின் அடிப்படையில், தமிழகம் ழுவதும் இயங்கும் 195 அனைத்து மகளிர் காவல்நிலையங்களையும் கலைப்பது என்ற கோரிக்கையை ஏற்க இயலாது என்றார்.












Click it and Unblock the Notifications