ஜெயேந்திரர் வக்கீலை கைது செய்யமாட்டோம்: போலீஸ் உத்தரவாதம்
சென்னை:
ஜெயேந்திரரின் வழக்கறிஞர் சண்முகத்தை கைது செய்ய மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்காஞ்சிபுரம் போலீஸார்உத்தரவாதம் கொடுத்தனர்.
காண்டிராக்டர் ரவிசுப்ரமணியத்தை காஞ்சிபுரம் சிறைக்குச் சென்று மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள்தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீமா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இதைத் தொடர்ந்து நசீமா பானு முதலில் முன் ஜாமீன் மனு தாக்கல் சய்து, முன் ஜாமீன் பெற்றார். இதையடுத்துமற்ற 3 பேரும் முன் ஜாமீன் பெற்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் போலீஸான் நடவடிக்கை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுகோரி சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடந்தது. அப்போது காஞ்சிபுரம் போலீஸார் ஒருஉத்தரவாதத்தை நீதிமன்றத்தில் கொடுத்தனர். அதில், சண்முகத்திற்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது என்றுகூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சிபிஐ விசாரணை கோரிய சண்முகத்தின் மனுவை டிஸ்போஸ் செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.












Click it and Unblock the Notifications