தண்டவாளத்தில் தலை வைத்தால் வீரனா? ஜெ. மீண்டும் சீண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்பவர் எல்லாம் வீரனாக முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும்கருணாநிதியை கிண்டலடித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதாகுறுக்கிட்டுப் பேசுகையில்,

கடந்த 5.3.2005ம் தேதியன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பொறுக்கிகள்ஒட்டியிருப்பார்கள் அல்லது போலீஸார் ஒட்டியிருப்பார்கள் என்று பதிலளித்துள்ளார்.

காவல்துறையினரை இழிவாகவும், தரக்குறைவாகவும் விமர்சிப்பது கருணாநிதிக்குப் புதிதல்ல, அது அவரதுஇயல்புதான். 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த புதிதில், காவல்துறையினர் குறித்து அவர் கருத்துத்தெரிவிக்கையில், காவல்துறையினரின் ஈரல் பாதி கெட்டுப் போய் விட்டதாக விமர்சித்தார்.

வீரத்திலும், தீரத்திலும் சிறந்தது தமிழ்நாடு என்ற உண்மையை சமீபத்தில் நிரூபித்தது வீரப்பன் வதம். அவனுக்கும்சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள். பொது நலத்துக்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடுபவர்கள்வீரர்கள்.

ஆனால் தங்கள் குடும்பத்துக்காக, குலவிளக்கு கோலோச்ச பலரைப் பலி கொடுக்கலாம் என்று திரிபவர்கள் எல்லாம்வீரர்களாக முடியாது.

செஞ்சிக் கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜா ஆக முடியாது என்பது பழமொழி.

நான் ஒரு புது மொழி சொல்கிறேன். தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்பவர்கள் எல்லாம் வீரனாக முடியாதுஎன்று கூறினார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+