கடல் கொந்தளிப்பு: நிலவின் ஈர்ப்பு விசையே காரணம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

சமீபத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலில் ஏற்பட்ட திடீர் அலைகளுக்கு அமாவாசையைஒட்டி ஏற்படும் நிலவின் ஈர்ப்பு விசை தான் காரணம் என்றும், சுனாமிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்றும் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடலில் திடீரென ராட்சத அலைகள்எழும்பின. இதனால் இப்பகுதி மக்களிடையே மீண்டும் சுனாமி பீதி ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.இதனால் ஏராளமான தென்னந் தோப்புகள் நாசமாயின. இதே போல கன்னியாகுமரி கடலிலும் கடல் கொந்தளிப்புஏற்பட்டது. இங்கு ராட்சத அலைகள் எழும்பின. இங்குள்ள கோவளம் கடற்கரை கிராமத்தினுள் கடல் நீர் புகுந்துசில வீடுகள் சேதமாயின.

இதே போல திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் பகுதியிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதனால் இப்பகுதி மக்களிடையே மீண்டும் சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடல் கொந்தளிப்புக்கும்,சுனாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக கடல்துறை சார்ந்த நிறுவன இயக்குனர்எஸ். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சமீபத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலில் ஏற்பட்ட திடீர் அலைகள்சுனாமிக்கான அறிகுறி அல்ல. பொதுவாக அமாவாசை தினத்தன்றும், அதற்குப் பிறகும் சில நாட்கள் நிலவின்ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும்.

கடந்த 10ம் தேதி அமாவாசை என்பதால் தொடர்ந்து சில நாட்கள் ஈர்ப்பு விசை அதிகமாகி அதனால் கடல்கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+