குண்டு வெடித்து இறந்த மாணவி குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
சேலம் வைஸ்யா கல்லூரியில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பயிற்சியின்போது தவறுதலாக அந்த குண்டு வெடித்ததில்பலியான மாணவியின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 1 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறுகையில், சேலம்வைஸ்யா கல்லூரியில், வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் செயல் திட்ட விளக்கத்தின்போது எதிர்பாராத விதமாக குண்டுவெடித்தது. இதில் 3 மாணவிகள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த மாணவி தீபலட்சுமியின் குடும்பத்தினருக்கு எனதுஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீப லட்சுமியின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் இழப்பீட்டுத் தொகையாகவழங்க உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த மற்ற 2 மாணவிகளுக்கும் நல்ல சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
நிராகரிக்கப்பட்ட உரிமை மீறல் பிரச்சினை:
முன்னதாக தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மீது திமுக கொறடா, புகழேந்தி உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்தார்.
கேள்வி நேரத்துக்குப் பின் புகழேந்தி எழுந்து, முதல்வர் ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பினேன். அதுஎன்னவாயிற்று என்றார். அதற்குப் பதிலளித்த சபாநாயகர் காளிமுத்து, அதுகுறித்து ஏற்கனவே பதில் அளித்தாகி விட்டது, அந்தப்பிரச்சினை முடிந்து விட்டது என்றார்.
இதனால் ஏமாற்றமடைந்த புகழேந்தி மேலும் பேசாமல் அமர்ந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications