சேலம் குண்டுவெடிப்பு: மாணவி பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்
சேலம்:
சேலம் வைஸ்யா கல்லூரியில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மாணவி, அறுவைச்சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்.
இக் கல்லூரியில் கடந்த 11ம் தேதி வெடிகுண்டு செயலிழிப்பு தொடர்பான விளக்க நிகழ்ச்சி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில், 3 மாணவிகள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தீபலட்சுமி என்பவர்இறந்தார்.
ஆரோக்கிய ரோஸ் மேரி மற்றும் நிஷா பானு ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் நிஷா பானுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அவரது மூளைப் பகுதியில் குண்டுத் சிதறல்கள் ஊடுறுவியுள்ளது. அவற்றை அகற்ற டாக்டர்கள் முயன்றனர். அது முடியாமல்போகவே அவரை பெங்களூர் கொண்டு சென்று அங்குள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்த்து அறுவைச் சிகிச்சை செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு நிஷா பானு பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாகஅறுவை சிகிச்சை செய்யப்பட்டு துகள்கள் அகற்றப்படவுள்ளன.
இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேஷ் தொடர்ந்து நான்காவது நாளாகஇன்றும் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 காவலர்கள் பணி இடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
ரோஸ் மேரி நலமாக இருப்பதாகவும், அவருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications