தமிழுக்கு என்ன வந்துருச்சு?: கிருஷ்ணசாமி கிண்டல்
கடலூர்:
தமிழ்மொழிக்கு யாரால் ஆபத்து வந்துவிட்டது என்று சொல்லாமல் டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் தமிழ் பாதுகாப்புஇயக்கம் தொடங்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடலூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்.
தமிழ் மொழிக்கு இப்போது என்ன ஆபத்து வந்து விட்டது? யாருக்கு, எதனால் ஆபத்து என்று சொல்லாமல், தங்களதுபிழைப்புக்காக தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ராமதாஸும், திருமாவளவனும் ஆரம்பித்துள்ளனர்.
இந்த இயக்கத்தை அவர்கள் தொடங்கியிருப்பது வேடிக்கையாக, கேலிக் கூத்தாக உள்ளது. சாதி என்ற நடைமுறை நாற்றத்தைமூடி மறைக்க தூவப்படும் வாசனைத் திரவியமே தமிழ் பாதுகாப்பு இயக்கம்.
இன்னும் தீண்டாமைக் கொடுமை தமிழகத்தில் தீர்ந்தபாடில்லை. கடலூர் மாவட்டம் சிறுதொண்டமாதேவி கிராமத்தில்ஒட்டுமொத்த தலித் கிறிஸ்தவ பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதுவரை அதுகுறித்து நடவடிக்கை எதுவும் இல்லை.தாழ்த்தப்பட்டோர் ஆணையம்கூட தனது கடமையைலிருந்து தவறியது.
இது போன்ற கொடுமைகள் தொடர தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசு சரியாக அமுல்படுத்தாதது தான்காரணம். இந்தக் கொடுமைகளை செய்யும் குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிவிடாமல் இருக்க, கூட்டுத்தண்டனை விதிப்பதே ஒரே தீர்வாகும். அதற்கு தகுந்தாற் போல சட்டத்தை திருத்த வேண்டும்.
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படக் கூடாது. அதை நாங்கள் விரும்பவில்லை, அதற்கு இப்போதுஅவசியமே இல்லை என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications