அதிமுக கூட்டணியை சோனியா விரும்புகிறார்:சுப்பிரமணியசாமி
மதுரை:
இந்து அறநிலையத்துறைக்கு, சங்கரராமன் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயேந்திரர் குறித்தும், சங்கர மடம் குறித்தும் இந்து அறநிலையத்துறைஅதிகாரிகளுக்கு சங்கரராமன் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். அப்போதுதான் இதுதொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது. அமெக்காவில் உள்ள இந்தியவிரோத சக்திகள்தான் இதற்குக் காரணம்.
பல ஆண்டுகளாக இத்தாலி நாட்டுக் குடியுரிமையுடன் ராகுல் காந்தி இந்தியாவில் நடமாடி வருகிறார். ஏப்ரல் 15ம் தேதிக்குள்அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது வழக்குத் தொடருவேன்.
விடுதலைப் புலிகளின் தீவிரவாத ஆதரவாளர்களான பாமக, மதிமுக, தலித் கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி வைத்து 3வதுகூட்டணியை அமைக்க சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். அதேசமயம் அதிமுகவுடனும், அதாவது 50 சதவீத சீட் தந்தால் கூட்டுசேரவும் அவர் தயாராகவே உள்ளார் என்றார் சுப்ரமணியசுவாமி.












Click it and Unblock the Notifications