சத்துணவு: குழந்தைகளுக்கு ரூ. 1 கோடி செலவில் சில்வர் தட்டுகள்
சென்னை:
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு எவர்சில்வர் தட்டும் டம்ளரும் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சட்டமன்றத்தில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து இன்றுஅமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி பேசியதாவது:
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அலுமினிய தட்டுகளுக்குப் பதிலாக சில்வர் தட்டும், ஒரு டம்ளரும்வழங்கப்படவுள்ளது. இதற்கு ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண் சிசுக் கொலையைத் தடுக்க தமிழக அரசு கொண்டு வந்தது தொட்டில் குழந்தைத் திட்டம். இந்த அகிலம் போற்றும்திட்டத்தால் எண்ணற்ற பெண் சிசுக்கள் உயிர் தப்பியுள்ளன. இவ்வாறு அரசு தொட்டிலில் இடப்படும் குழந்தைகளில் சிலருக்குஇதயக் கோளாறு, உடல் ஊனம், எய்ட்ஸ் போன்ற பாதிப்புகள் உள்ளன.
இந்தக் குழந்தைகளை கவனிக்கவும் சிகிச்சை அளித்து பராமரிக்கவும் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு ரூ. 100 வீதம் வழங்கஅரசு முடிவு செய்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications