678 அரசு பஸ் டிரைவர்களுக்கு அபராதம்
சென்னை:
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய அரசு பஸ் டிரைவர்கள் 678 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டூ விலர்களையும் லாரிகளையும் மட்டுமே குறி வைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாகவும், அரசு பஸ்களின்விதி மீறல்களை போலீசார் கண்டு கொள்வதில்லை என்றும் பரவலாக புகார் உள்ளது.
இந் நிலையில் போக்குவரத்து விதிகளை மீறும் அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கஆரம்பித்துள்ளனர் போலீசார்.
கடந்த இரு மாதங்களில் இவ்வாறு 678 டிரைவர்கள் சிக்னல்களை மதிக்காமல் பஸ்களை ஓட்டி நடவடிக்கைக்குஉள்ளாகியிருக்கின்றனர்.
இந்த பஸ்சின் தடம் எண், பஸ்சின் எண், விதிமீறல் நடந்த இடம், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு போக்குவரத்துக் கழகத்துக்குபோலீசார் நோட்டீல் அனுப்பி வைக்கின்றனர். இதன் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட டிரைவரின் மாத ஊதியத்தில் இருந்துஅபராதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
சிக்னலை ஜம்ப் செய்யும் டிரைவர்களுக்கு ரூ. 50 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த அபராதம் காரணமாக டிரைவர்கள் தவறு செய்வது ஓரளவுக்குக் குறைந்துள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள்தெரிவிக்கின்றனர். அடிக்கடி பைன் கட்டும் டிரைவர்கள் தாற்காலிகமாக ஓட்டுனர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு,அவர்களுக்கு கவுன்சிலிங்கும் பயிற்சியும் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications