சுனாமி: சென்னை மீனவர்கள் சிறப்பு யாகம்
சென்னை:
மீண்டும் சுனாமி தாக்குதல் ஏதும் ஏற்படாமல் தங்களைக் காக்க வேண்டி சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள் சிறப்பு யாகம்மற்றும் பூஜை நடத்தினர்.
சுனாமி தாக்கிய பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. மீன்வர்கள் மீன்பிடித் தொழிலில் மீண்டும்தீவிரமாகியுள்ளனர்.
இந் நிலையில், சுனாமி அலைத் தாக்குதல் மீண்டும் வரக் கூடாது என்று வேண்டியும், மீனவர்கள் மனதிலிருந்து அச்சம் நீங்கவேண்டியும், சென்னை காசிமேடு பகுதியில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இந்தயாகம் நடந்தது.
20 புரோகிதர்கள் கலந்து கொண்டு யாகம் வளர்த்தார்கள். நிறைய மீன்கள் கிடைக்கவும் பூஜை செய்யப்பட்டது.
சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். பின்னர் மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடித் தொழிலை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.அவருடன் ஆட்சித் தலைவரும் உடன் சென்றார்.
அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனாமி நிவாரணத்துக்கு ரூ. 901 கோடி:
இந் நிலையில் சட்டசபையில் இன்று 2004-05ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல்செய்தார். அதில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள மாநில அரசு இதுவரை ரூ. 901.88கோடியை ஒதுக்கியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications