இந்தாண்டுக்குள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: சொல்கிறது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இந்தாண்டுக்குள் வெளியாகும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன்தாஸ்முன்ஷி கூறியுள்ளார்.
சென்னை வந்த முன்ஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இந்த ஆண்டுக்குள்வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு தான் இந்த விவகாரத்தில் நிலைமை தெளிவாகும்.
இந்த ஆண்டு பருவ மழையைப் பார்த்து விட்டு தமிழக, கர்நாடக அரசுகளுடன் பேச மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
இதுபோல பல ஆட்சிகளில் பல அமைச்சர்கள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு இதோ வரப் போகிறது.. அதோ வரப் போகிறது என்றுகூறிவிட்டுச் சென்றுள்ளது நினைவுகூறத்தக்கது.
புலி வருது கதையாகத் தான் இருக்கிறதே தவிர தீர்ப்பு எப்போது வருமோ அது காவிரிக்கே வெளிச்சம். அப்படியே தீர்ப்புவந்தாலும் அதை கர்நாடகம் மதிக்க வேண்டுமே?












Click it and Unblock the Notifications