தமிழக அரசியல்: பாஜக சிந்தனைக் கூட்டம்
சென்னை:
தமிழக பாஜக சார்பில் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் சிந்தனைக் கூட்டம்நடைபெறவுள்ளது.
அகில இந்திய தலைவர்களான வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, பிரமோத் மகாஜன் மற்றும் தமிழகதலைவர்கள் கலந்து கொள்ளும் இக் கூட்டத்தில் தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்துவிவாதிக்கப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜக மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள்குறித்தும், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இத்தகவலை நிருபர்களிடம் தெரிவித்த அக் கட்சியின் தேசிய செயலாளர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில்,
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். முரளி மனோகர் ஜோஷிமீதான அவதூறு வழக்கை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரினார்.
பிற கட்சிகள் பொதுக் குழு, செயற்குழுவைக் கூட்டி கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பது வழக்கம். ஆனால்,பாஜகவில் ஆர்எஸ்எஸ் பழக்கப்படி சின்ந்தன் சதக் எனப்படும் சிந்தனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டே முக்கிய கொள்கைமுடிவுகள் எடுக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications