முரளிதரன்-மதிமலர் திருமண வரவேற்பு; பிரபலங்கள் பங்கேற்பு
சென்னை:
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. இதில் ஏராளமான கிரிக்கெட்பிரபலங்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு முரளிதரன்-மதிமலர் தம்பதியை வாழ்த்தினர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான முரளிதரனுக்கும், சென்னை மலர் மருத்துவமனையைநிறுவிய, மறைந்த டாக்டர் ராமமூர்த்தியின் மகள் மதிமலருக்கும் சென்னையில் மார்ச் 21ம் தேதி திருமணம் நடந்தது.
இவர்களது திருமண வரவேற்பு பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடந்தது. முக்கிய பிரமுகர்கள் சுமார் 700 பேர்இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும், கேப்டன் மரவன் அட்டப்பட்டு தலைமையில் வந்துமுரளிதரனை வாழ்த்தினர். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப்பும் வந்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன் தனது மனைவியுடன் வந்து முரளிதரன்தம்பதியை வாழ்த்தினார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் தென்னிந்திய ஸ்பெஷல் உணவு வகைகள் பரிமாறப்பட்டன.












Click it and Unblock the Notifications