அமைதி பேச்சு இப்போதைக்கில்லை: கதிர்காமர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகள் ஏதும் தொடங்க முடியாது என இலங்கை அரசு கூறியுள்ளது.
அதிபர் சந்திரிகாவின் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது முதலே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கானஎந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நிருபர்களிடம் பேசுகையில்,
முறையாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை. இப்போதைக்கு சுனாமி நிவாரணத்தில் தான் கவனம்செலுத்தி வருகிறோம்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், வெளிநாட்டு உதவியை பிரித்துத் தரவும் புலிகளுடன் இணைந்து செயல்படமுயன்று வருகிறோம்.
இந்த விஷயத்தில் இரு தரப்பினரும் கூட்டாக செயல்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications