கடவுள்களுடன் அம்மா கூட்டணி!
சென்னை:
நபிகள் நாயகம், இயேசு கிறிஸ்து மற்றும் இந்துக் கடவுள்கள் அனைவரும் "அம்மாவுக்கு" துணையாக, பக்க பலமாக உள்ளதாகசட்டசபையில் அமைச்சர் ஊரக தொழில்துறை வளர்மதி பேசினார்.
வளர்மதி பேசுகையில், மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என சில தலைவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். தங்களது கூட்டணிவலுவாக அமைந்திருப்பதாக அவர்களே நினைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் ஆட்சிக் கனவில் இருக்கிறார்கள்.
அந்தக் கூட்டணி வலுவானது இல்லை. உண்மையில் கடவுள்களின் துணையோடு இருக்கும் அம்மாவின் கூட்டணிதான் வலுவானது, அவர்இறைவர்களோடு கூட்டணி அமைத்துள்ளார். இந்தக் கூட்டணிதான் வெல்லும்.
உங்களது கூட்டணி நேரத்துக்கு நேரம் மாறும் நிலையில்லாக் கூட்டணி. எங்களது கூட்டணி நிரந்தரமானது. புரட்சித் தலைவியின்இதயத்தில் அத்தனை கடவுள்களும் நிரந்தரமாக வீற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் அம்மாவைக் கைவிட மாட்டார்கள்.
நான் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த முறையும் புரட்சித் தலைவிதான் முதல்வர் இருக்கையில் அமர்வார் என்றார்வளர்மதி.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் மேசைகளைத் தட்டோ தட்டு என்று தட்டினர்.












Click it and Unblock the Notifications