வாக்காளர்களே.. விழிப்புணர்வுடன் இருங்கள்: கிருஷ்ணமூர்த்தி
மதுரை:
வாக்காளர்கள், தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று வாக்காளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணமூர்த்தி,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சமயத்தில் வாக்காளர்கள் மிகவும்விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
பட்டியலை சரி பார்க்க வரும் ஊழியர்களுக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சீரமைப்புப்பணி முடிவடைந்ததும் இணைய தளத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் வாக்காளர்களின் பெயர்,வயது, முகவரி தவிர, எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரம் இடம் பெறும்.
இந்தியாவில் சராசரியாக 50 முதல் 60 சதவீதம் வரை தான் வாக்குகள் பதிவாகின்றன. அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போடவேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டால், ஓட்டுப் போடாத வாக்காளர்களிடம் விசாரணை நடத்துவதிலேயே தேர்தல்ஆணையத்தின் முழு நேரமும் போய்விடும் என்றார் கிருஷ்ணமூர்த்தி.












Click it and Unblock the Notifications