பெய்ரூட்டில் குண்டுவெடிப்பு: 2 இந்தியர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்:
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கார் குண்டு வெடித்ததில் 2 இந்தியர்கள் இறந்தனர்.
கிழக்கு பெய்ரூட்டிலுள்ள ஒரு பகுதியில் நேற்று நள்ளிரவு அதிசக்தி வாய்ந்த ஒரு கார் குண்டு வெடித்தது. இதில் 2 இந்தியர்கள்உடல் சிதறி இறந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. குண்டு வெடிப்பு நடந்த இடம்கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.
இது கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதியில் நிகழும் 3வது குண்டு வெடிப்பு சம்பவமாகும். இந்த குண்டு வெடிப்புகளில் இதுவரை 3இந்தியர்கள் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications