For Daily Alerts
Just In
பஹ்ரைன் விமானத்தில் திடீர் கோளாறு
சென்னை:
சென்னையிலிருந்து பஹ்ரைன் கிளம்பிய கல்ப் ஏர்லைன்ஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக பாதியிலேயேதரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து இன்று காலை பஹ்ரைன் செல்ல கல்ப் ஏர்லைன்ஸ் விமானம் தயாராக இருந்தது. டேக் ஆப் ஆன சிலநொடிகளிலேயே, விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதைக் கண்டுபிடித்து விட்ட விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கினார். விமானத்தில் இருந்த 224 பயணிகளும்பத்திரமாக உயிர் தப்பினர்.
இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் பஹ்ரைன் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, March 27, 2005, 5:30 [IST]