ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு நாளை மீண்டும் விசாரணை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நாளை மீண்டும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணைக்குவருகிறது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. கடந்த மாதம் முதல்விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வரவில்லை. சட்டசபைக் கூட்டம் நடப்பதால் விசாரணையில்கலந்துகொள்ள விலக்குக் கோரியதால், நீதிபதி பச்சாப்பூரே விலக்கு அளித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இருப்பினும் நாளையும் ஜெயலலிதா ஆஜராகமாட்டார் எனத் தெரிகிறது. சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடப்பதால், ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வருவது சந்தேகமே.












Click it and Unblock the Notifications