திருச்சி மொழிப்போர் மாநாட்டில் போராட்ட அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் அறிவிப்பு மாநாட்டில் 2 கட்ட போராட்டங்களை டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.

திருச்சியில் நேற்று 3வது மொழிப்போர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட டாக்டர். ராமதாஸ் 2 கட்ட போராட்ட அறிவிப்புகளைவெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் ஆகியவற்றில் பெயர் மற்றும்விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை தரவேண்டுமென்ற தமிழக அரசின் அரசாணைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போராடி வருகிறது.

ஆனால் இதை இதுவரை யாரும் பொருட்படுத்தவில்லை. அரசும் இதை நடைமுறைப் படுத்துவதில் எந்த ஆர்வமும்காட்டவில்லை. நாங்கள் மீண்டும் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.

இதன் பின்னரும் எங்களது வேண்டுகோளை புறக்கணித்தால் தமிழை பாதுகாக்கும் வகையில் மே 23ம் தேதி தமிழகம் முழுவதும்வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளில் உள்ள பிறமொழிப் பெயர்களை தார்பூசி அழிப்பது என இதன் மூலம்தெரிவித்துக் கொள்கிறோம்.

2வது கட்டமாக தமிழ் பாதுகாப்பு இயக்கம் முன் வைத்திருக்கும் 10 கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழகஅரசையும், இந்திய அரசையும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இந்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமேயானால் நவம்பர் 1ம் தேதி லட்சக்கணக்கானோர் சிறை செல்லும் வகையில்தமிழகத்தின் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தி சிறை செல்வோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+