திருப்பதியில் தொலை தூர தரிசன முறை அறிமுகம்
திருப்பதி:
திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி விரைவாக தரிசனம் செய்வதற்காக, "தொலை தூர தரிசன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் விழாக்காலம் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் குவிவது வழக்கம். இந்தக் கூட்டநெரிசலால் பல நாட்கள் காத்திருத்துபக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதைத் தவிர்ப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. இதன்படி, கோவிலின் கருவூலத்திலிருந்து 60 அடிதூரத்திலிருந்த படியே, அதாவது துவாரபாலகர்கள் சிலை அருகிலிருந்து வெங்கடேச பெருமாளை தரிசிக்கலாம்.
இப்புதிய முறைக்கு, "தொலை தூர தரிசனம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்புதிய முறை சோதனை அடிப்படையில் நேற்று 4 மணி நேரம் செய்துபார்க்கப்பட்டது. அதிகளவு நெரிசல் ஏற்படும் காலங்களில் இப்புதிய முறையை தேவஸ்தானம் பின்பற்ற உள்ளது. இதனால் பக்தர்கள் இந்த சமயங்களில்சிரமமின்றி பெருமாளை தரிசிக்கலாம்.












Click it and Unblock the Notifications