பெங்களூர் டெஸ்ட்: பாக். அபார வெற்றி
பெங்களூர்:
பெங்களூரில் நடைபெற்ற இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிவடைந்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. கொல்கத்தாவில்நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந் நிலையில் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிபெங்களூரில் கடந்த 24ம் தேதி தொடங்கியது.
கடந்த 2 போட்டிகளிலும் டாசில் தோற்ற பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம், இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில்பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 570 ரன்களைக் குவித்தது.
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 449 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது களமிறங்கிய பாகிஸ்தான் 2 விக்கெட்இழப்பிற்கு ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 383 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கட்இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது.
மிகவும் பரபரப்பான நிலையில் இன்று இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக்கும், காம்பிரும் களமிறங்கினர். இந்தியாவெற்றி பெறாவிட்டாலும் "டிராவாவது செய்யும் என்று தான் ரசிகர்கள் கருதியிருந்தனர்.
ஆனால் பாகிஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்துவெளியேறினர். இறுதியில் 214 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் பாகிஸ்தான் 168 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் இந்த வெற்றியால் டெஸ்ட் தொடர்1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கும் இடையே ஒரு நாள் போட்டித் தொடர் ஏப்ரல் 2ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.
டெண்டுல்கர் சாதனை:
இதற்கிடையே டெஸ்ட் போட்டியில் இந்தியாவிலேயே அதிக ரன்கள் எடுத்திருந்த கவாஸ்கரின் சாதனையை டெண்டுல்கர் இன்றுமுறியடித்தார்.
டெஸ்ட் போட்டியில் முதலில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் சுனில் கவாஸ்கர். இவர் மொத்தம்10,122 ரன்களை எடுத்திருந்தார். இதற்குப் பிறகு இவரது சாதனையை ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக்,மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த லாரா ஆகியோர் முறியடித்தனர்.
10,000 ரன்களை டெண்டுல்கர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கடந்தார்.
இன்று, கவாஸ்கரின் 10,122 ரன்களை டெண்டுல்கர் கடந்து இந்தியாவிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர்என்ற சாதனையைப் படைத்தார்.
தற்போது ஆலன் பார்டர் 11,174 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.












Click it and Unblock the Notifications