காஞ்சி மடத்துக்கு ஜெயேந்திரர் திடீர் வருகை!
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் இன்று அதிகாலை திடீரென சங்கர மடத்துக்கு வந்தார். 143 மாட்களுக்குப் பின் மடத்துக்கு வந்த அவரிடம்ஏராளமான பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ஜெயேந்திரர் கலவை மடத்தில் தங்கியுள்ளார். இந்த வழக்கில் விசாரணைமுடியும் வரை அவர் காஞ்சி மடத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையிலும் ஜெயேந்திரர் காஞ்சி மடம் வருவதைத் தவிர்த்தே வந்தார்.
தொடர்ந்து அவர் கலவை மடத்திலேயே தங்கியுள்ளார். அங்கேயே பூஜைகளை நடத்தி வரும் ஜெயேந்திரர் பக்தர்களையும்சந்தித்து வருகிரார்.
இந் நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் கலவை மடத்திலிருந்து வேனில் புறப்பட்டார். வேன் காஞ்சிபுரத்துக்கு வந்தது.சங்கர மடத்தின் அருகே புதிதாகத் தொடங்கப்பட்டுள் இலவச ஆயுர்வேத மருத்துவமனையை திறந்து வைத்த ஜெயேந்திரர்,யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென காஞ்சி மடத்துக்குள் சென்றார்.
ஜெயேந்திரர் வருவது ஓரிரண்டு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்தத் தகவல்பக்தர்களிடையே தீ போல் பரவிவிட அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டுவிட்டனர்.
மடத்து வாசலில் அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பளித்தனர். 143 நாட்களுக்குப் பின் மடத்துக்குள் வந்த ஜெயேந்திரரை மடத்துஊழியர்கள் வேதமந்திரங்கள் முழங்க வரவேற்றனர். பலரது கண்களில் கண்ணீர்.
நேராக மகாபெரியவரின் அதிஷ்டானத்துக்குச் சென்ற ஜெயேந்திரர் அங்கு அர்ச்சனை நடத்தினார். பின்னர் மடத்தின் ஒவ்வொருபகுதியையும் சென்று பார்வையிட்ட ஜெயேந்திரரின் முகத்தில் நீண்ட நாட்களாய் மறைந்து போயிருந்த புன்னகைதிரும்பியிருந்ததைப் பார்க்க முடிந்தது.
5.45 மணி வரை சுமார் முக்கால் மணி நேரம் மடத்தில் இருந்த ஜெயயேந்திரர் பூஜையும் நடத்திவிட்டு காமாட்சி அம்மன்கோவிலுக்குச் சென்றார். வழியில் கவுசிகேஸ்வரர் சன்னதியில் தானே தீபாராதனை காட்டி பூஜை நடத்தினார்.
6 மணிக்கு காமாட்சி அம்மன் ஆலயத்தை அடைந்த ஜெயந்ேதிரருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் மிகச் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. பின்னர் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பால் அபிஷேகம் செய்த ஜெயேந்திரர் காமாட்சிஅம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார்.
அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆதிசங்கரருக்கும் பால் அபிஷேகம் நடந்தது.
அம்மனுக்கு அன்னப்பாவாடை எனப்படும் கற்கண்டு கலந்த பொங்கல் படைத்து பூஜை செய்தார். 1 மணி நேரம் அம்மனுக்குஇந்தப் பூஜைகளை ஜெயேந்திரர் நடத்தினார்.
பூஜையைய முடித்துவிட்டு 7 மணிக்கு சுக்ரவார மண்டபத்தில் உள்ள மர பெஞ்சில் அமர்ந்தார். அங்கு அவரைக் காணக்கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அவரது காலில் விழுந்து கண்ணீர் பொங்க ஆசி பெற்றனர். அவர்களுக்கு பழம், பூ,கற்கண்டு வழங்கி ஆசி வழங்கிய ஜெயேந்திரர் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டார்.
10 நிமிடங்களில் ஆசி வழங்கி முடித்துக் கிளம்பிய ஜெயேந்திரரை நோக்கி அழைத்து வரப்பட்டது காமாட்சி அம்மன் கோவில்யானைக் குட்டி. அப்போது தனக்கு வாழைப் பழத்தை வழங்கிய யானைக் குட்டிக்கு ஆசி வழங்கிவிட்டு வேனில் ஏறி அமர்ந்தார்ஜெயேந்திரர்.
மீண்டும் கலவை மடத்துக்குப் புறப்பட்ட ஜெயேந்திரரின் கண்களில் நீர் துளிர்த்திருந்தது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications